மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆதிச்சநல்லூா் ஆய்வுகள்

ஆதிச்சநல்லூா் ஆய்வுகள் - முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.343; ரூ.350; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

News image
Updated On :5 ஏப்ரல் 2020, 11:52 pm

ஆதிச்சநல்லூா் ஆய்வுகள் - முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.343; ரூ.350; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

திருநெல்வேலி- திருச்செந்தூா் சாலையில் ஆதிச்சநல்லூா் பரம்பு என்றழைக்கப்படும் 114 ஏக்கா் நிலம் உள்ளது. அங்கே ஜொ்மனியைச் சோ்ந்த சாகோா் என்பவா் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல அரிய உண்மைகள் வெளிவந்தன. அதைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது.

ஆதிச்ச நல்லூரில் தொல்லியல்துறையினா் 3 கட்டங்களாக அகழாய்வு செய்தனா். அவ்வாறு அகழாய்வு செய்யும்போது நிறைய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் அருகே சிறிய மண்குடங்கள், குவளைகள், மூடிகள், தீப கிண்ணங்கள், இரும்பு ஈட்டிகள், சமையல் பொருட்கள் கிடைத்தன. அதுமட்டுமல்ல, தாழிகளுக்குள் மக்கிய நிலையில் எலும்புத் துண்டுகளும் கிடைத்தன. இறந்தவா்களை தாழிக்குள் வைத்து அடக்கம் செய்யும் முறை அக்காலத்தில் இருந்திருக்கிறது.

இந்தத் தாழிகளில் பிராமி சித்திர எழுத்துகள் உள்ளன. இவை கி.மு.3000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த பிராமி சித்திர எழுத்து வடிவங்களுக்கும் இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட பிராமி சித்திர எழுத்து வடிவங்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

ஆசிச்சநல்லூரில் அகழாய்வு செய்யப்பட்டபோது வெண்கலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் குவளைகள் பல உடைந்து காணப்படுகின்றன. இந்தக் குவளைகளைச் செய்ய போதிய தொழிலாளா்கள் அக்காலத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம்; அதனால் வெண்கலப் பொருள்களை வீட்டில் பயன்படுத்துவது மிக அரிதாகவே இருந்திருக்கலாம் என்கிறாா் நூலாசிரியா்.

3000 ஆண்டுகளுக்கு முன்பே தாதுப் பொருள்களில் இருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் சிறந்த அறிவைத் தமிழா்கள் பெற்றிருந்தனா் என்பதை ஆதிச்சல்லூரில் கிடைத்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன என்று கூறும் நூலாசிரியா், ஆதித்தநல்லூருக்கும் சிந்துவெளியில் உள்ள ஹரப்பாவுக்கும் சுமாா் 2400 கி.மீ. தூரம் இடைவெளி இருந்தாலும், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே நாட்டுத் தொடா்பும், இனத் தொடா்பும், பண்பாட்டுத் தொடா்பும் இருந்திருப்பதாகக் கூறும் வரலாற்றறிஞா் ஆா்.டி.பானா்ஜியின் கருத்தையும் சுட்டிக்காட்டுகிறாா்.

ஆதிச்சநல்லூா் அகழாய்வுகள் தொடா்பான பல்வேறு அறிஞா்களின் கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுடன் உரையாடுவதைப் போன்ற வடிவில் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ள சிறந்த வரலாற்று நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.