ராமோஜியம் ( நாவல்) - இரா.முருகன்; பக்.624; ரூ.600; கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; -044 - 4200 9603.
"பொடி' என்ற பெயரில் எழுதப்பட்ட சிறுகதை - "ராமோஜியம்' என்னும் பெரிய நாவலாக உருவெடுத்திருக்கிறது.
ராமோஜிராவ் - ரத்னாபாய் தம்பதிகள் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டுகள் வரை பிறக்கிறார்கள் - இறக்கிறார்கள். தங்கள் விருப்பு வெறுப்புகளின்படி வாழ்கிறார்கள். ராமோஜி - ரத்னாபாய் காதல் அரும்பியது ( 1935), சென்னையில் இவர்களின் திருமணம் ( 1937), ஜப்பான் விமானம் குண்டு போடுதல் (1943) - ரத்னா பாயின் அண்ணன் மகள் பூப்பெய்துவது - டில்லிக்கும், காசிக்கும் செல்வது (1944)- ராமோஜிராவ் தம்பதிக்கு குழந்தை வரம் வேண்டி திருக்கருகாவூர் பயணம் மேற்கொள்வது (1945) - என்று ஆண்டுகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்களை இணைத்து எழுதப்பட்டுள்ளதால் இது ராமோஜியின் சுயசரிதம் போன்ற தோற்றத்தையும் தருகிறது.
ஃப்ளாஷ்பேக் உத்தியில் - பதினேழாம் நூற்றாண்டில் மேற்குக் கடற்கரையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மராத்திய கப்பல் படைத்தலைவன் சுனோஜி ஆங்க்ரேவுடன் பணியில் சேர்வது - சரபோஜி ஆங்க்ரே ஆவது, சாகசங்கள் நிகழ்த்துவதும்,
பதினெட்டாம் நூற்றாண்டில் - புதுச்சேரி பிரெஞ்சுக் கவர்னர் டூப்ளேயின் துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளை சுகவீனத்துடன் இருக்க, அவருக்குப் பதிலாக ராமோஜி பணியில் சேர்ந்து நாட்டிய நாடகம் அரங்கேற்றும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். சுவாரசியமான நாவல்.