தில்லி டெஸ்ட் போட்டியில் அஜிங்க்யா ரஹானே விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: ரஹானேவுக்கு நீண்ட காலமாக வாய்ப்பு கொடுக்காமல் வெளியில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். இது வீரர்களின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல.
தில்லி போட்டியில் ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். சேதேஷ்வர் புஜாரா 3-வது வீரராக களமிறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தோல்வி கண்டால் அதற்காக ஆச்சரியப்படமாட்டேன்.
இந்தப் போட்டி முடிந்ததும், அடுத்ததாக ஐபிஎல் போட்டி தொடங்கிவிடுகிறது. அது முடிந்த அடுத்த சில நாள்களில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவது கடினமானதுதான். எனினும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட இந்திய வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










