4 நாள் போட்டி: தெ.ஆ. ஏ அணி 260 ரன்கள்!

அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Updated on
1 min read

கேரளாவின் வயநாட்டில் நடைபெறும் நான்கு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ அணியின் அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளிடையே 4 நாள்கள் கொண்ட 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேரளத்தின் வயநாட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தெ.ஆ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

2 விக்கெட்டுகளுக்கு 185 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்த தெ.ஆ ஏ அணி பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. 89.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வான் ஸைல் 96 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com