ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சனிக்கிழமை (ஏப். 25) முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டன. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் போர் தொடங்கியதால், ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதுமாக முடக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள இமாம் கொமேனி விமான நிலையத்தில் இருந்து வரும் சனிக்கிழமை முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்மூலம், முதற்கட்டமாக தெஹ்ரானில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் மற்றும் ஓமனின் மஸ்கட் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
ஏற்கெனவே, ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹதின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பிராந்தியத்தில் பதற்றமான சூழல் தொடர்வதால், இந்தியர்கள் யாரும் ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம் என தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
International flights will operate from Tehran, starting Saturday (April 25).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைப்பு! காரணம் என்ன?

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!
ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் அவசரமாக நிறுத்தம்! தீ விபத்தா?
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




