ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தெஹ்ரானில் வெடிப்புச் சப்தங்கள்: தாக்குதல்களைத் தொடங்கிய இஸ்ரேல்!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திங்கள்கிழமை அதிகாலையில் ‘முன்னெப்போதும் இல்லாத வெடிப்புச் சப்தங்கள்’ குறித்து...

News image

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திங்கள்கிழமை அதிகாலையில் ‘முன்னெப்போதும் இல்லாத வெடிப்புச் சப்தங்கள்’

Updated On :23 மார்ச் 2026, 10:09 am IST

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திங்கள்கிழமை அதிகாலையில் ‘முன்னெப்போதும் இல்லாத வெடிப்புச் சப்தங்கள்’ கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

அணு ஆயுதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி ஜெனீவாவில் பேச்சுவார்த்தையுடன் தொடங்கி பிரச்னை போராக உருவான நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் சேர்ந்து நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன்பின்னர், வளைகுடா நாடுகள் மீது ஈரானும், ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேஸ் மாறி மாறி தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.

ராணுவ முகாம்கள், எரிசக்தி கட்டமைப்புகள் மட்டுமின்றி குடிநீர் நிலையங்கள், பொதுமக்களின் குடியிருப்புகள் மீதும் இருதரப்பும் தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றன.

ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள அந்நாட்டின் அனுசக்தி மையம் மீது சனிக்கிழமை தீடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இஸ்ரேஸ் அணு ஆராய்ச்சி மையம் இருக்கும் பகுதி அருகே ஈரான் ஏவுகனைகளை வீசி சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலால் இஸ்ரேலில் பெரும் பதற்றம் நிலவியது.

‘முன்னெப்போதும் இல்லாத வெடிப்புச் சப்தங்கள்’

இந்த நிலையில், ஈரானின் கிழக்கு தெஹ்ரானில் திங்கள்கிழமை அதிகாலையில் ‘முன்னெப்போதும் இல்லாத வெடிப்புச் சப்தங்கள்’ கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, யுத்தம் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்திருப்பதாக அறிவித்துள்ளது.

தெஹ்ரானில் வெடிப்புச் சத்தம் கேட்டது என உள்ளூர் ஊடகமான மெஹ்ர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஈரானிய தலைநகரின் ஐந்து பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், "பயங்கரமான வெடிப்புச் சப்தங்கள் கேட்கப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சேதத்தின் அளவு மற்றும் உயிரிழப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளது.

இஸ்ரேலின் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் உள்கட்டமைப்புகளைக் ‘குறிவைத்து ஒரு பரந்த அளவிலான தாக்குதல்களை’நடத்தவிருப்பதாக" அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் முழுவதும் சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

Summary

The Israeli military has issued a statement announcing a “wave of extensive strikes targeting” Iran government infrastructure in Tehran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.