இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. சில நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது. இதையடுத்து, ஈரான் மீதான தாக்குதலைக் கைவிட பரிசீலனை செய்து வருவதாக டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஈரானுக்கு டிரம்ப் கெடு விதித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு 48 மணி நேரத்துக்குள் ஈரான் முழுவதும் திறக்க வேண்டும். இல்லையேல் ஈரானிலுள்ள மின்னுற்பத்தி நிலையங்கள் அனைத்தையும் அமெரிக்கா அழித்துவிடும். அதில் முதல் தாக்குதலே ஈரானில் உள்ள மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையமாகத்தான் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.