துலீப் டிராபி போட்டியை ரத்து செய்தது பிசிசிஐ!

ஒருவேளை இந்தப் போட்டி அடுத்த வருடம் மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
Updated on
1 min read

இன்று பிசிசிஐயின் 2015-16ம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, துலீப் டிராபிக்கான போட்டியை ரத்து செய்துள்ளது பிசிசிஐ.

கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறும் துலீப் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை. 1961-62, இதன் முதல் போட்டி நடந்தது.

வீரர்கள் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொள்வதால் துலீப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அக்டோபர் 1 முதல் உள்ளூர் போட்டிகள் தொடங்குகின்றன. 6 மாத கால இடைவெளியில் 900 போட்டிகளை நடத்துகிறது பிசிசிஐ. துலீப் போட்டி ரத்து பற்றி பிசிசிஐ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இந்தப் போட்டி அடுத்த வருடம் மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com