டெல்லி அணியை விட்டு விலகுகிறார் வீரேந்திர சேவாக்!

17 வருடங்கள் கழித்து டெல்லி அணியை விட்டு விலக முடிவெடுத்துள்ளார்.
டெல்லி அணியை விட்டு விலகுகிறார் வீரேந்திர சேவாக்!
Updated on
1 min read

டெல்லி ரஞ்சி அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக். 

1997-98 முதல் டெல்லி அணிக்காக ரஞ்சி மற்றும் இதர உள்ளூர்ப் போட்டிகளில் ஆடிவருகிறார் சேவாக். இப்போது 17 வருடங்கள் கழித்து டெல்லி அணியை விட்டு விலக முடிவெடுத்துள்ளார்.

சென்ற வருட ரஞ்சிப் போட்டியில் சேவாக் நன்றாகவே ஆடினார். எட்டுப் போட்டிகளில் 568 ரன்கள் எடுத்தார். சமீபகாலமாக டெல்லி கிரிக்கெட் நிர்வாகத்தோடு அவ்வப்போது முட்டிக்கொள்ளும் சேவாக், இப்போது தன் அணியில் உள்ள இளைஞர்களின் நலனுக்காக வேறு மாநில அணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

தான் மட்டுமில்லாமல் கம்பீர், ரஜத் பாட்டியா ஆகிய அனுபவம் மிக்க வீரர்கள் அணியில் உள்ளதால் இளம் வீரர்களுக்குத் தகுந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று அவர் எண்ணுகிறார். இதனால் புதிய அணியில் சேர்ந்து அடுத்த ரஞ்சிப் போட்டியை எதிர்கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சேவாக்கைத் தங்கள் அணியில் சேர்க்க சில மாநிலங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவரக்கூடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com