என்.பி.ஏ.வில் விளையாட இந்தியர் தேர்வு!

19 வயது சத்னம் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 7 அடி 2 அங்குல உயரம் கொண்டவர்.
என்.பி.ஏ.வில் விளையாட இந்தியர் தேர்வு!
Updated on
1 min read

தேசிய கூடைப்பந்து கழக லீக்கில் (என்.பி.ஏ.) விளையாட பஞ்சாப் இளைஞர் சத்னம் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் என்.பி.ஏ-வில் இடம்பிடித்த 'முதல் இந்திய கூடைப்பந்து வீரர்' என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

19 வயது சத்னம் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 7 அடி 2 அங்குல உயரம் கொண்டவர். கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சிம் புல்லர், என்.பி.ஏ.வில் விளையாடும் முதல் இந்திய வம்சாவளி வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். ஆனால், இந்தியாவிலேயே பிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் (சத்னம் சிங்) என்.பி.ஏ.வில் பங்கேற்பது இதுவே முதல்முறை.  டலாஸ் மேவரிக்ஸ் என்கிற அணிக்கு அவர் தேர்வாகியுள்ளார்.

இதுபற்றி சத்னம் சிங் பேட்டியளித்தபோது, ‘என்.பி.ஏ.வில் நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இன்னும் நிறைய இந்திய இளைஞர்கள் தேர்வாக வாய்ப்பை அளிக்கும். இனி வருங்காலங்களில் இந்தியாவிலும் கூடைப்பந்து பிரபலமாகும்.’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com