

தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இரு நபர் கொண்ட குழுவை அமைத்து முதல் அமைச்சர் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.
தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, அந்த புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு கேஜரிவால் உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சி துறை மற்றும் விளையாட்டு துறை சேர்ந்த செயலர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் தங்களது விசாரணை அறிக்கையை சனிக்கிழமைக்குள் முதல்வரிடம் சமர்ப்பிப்பார்கள் என அரசு வட்டாரங்கள் கூறின.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், தில்லியை சேர்ந்தவருமான கவுதம் கம்பீர் முதல்வர் கேஜரிவாலை இன்று சந்தித்து, இந்த விவகாரம் குறித்து விவாதித்தார். சிலநாள்களுக்கு முன்பு முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் பிஷன்சிங் பேடி, கேஜரிவாலை சந்தித்து தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் குறித்து புகார் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.