பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கோவா அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணித்த கோவா எப்.சி. அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம்

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணித்த கோவா எப்.சி. அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை 10 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
 கடந்த டிசம்பரில் நடந்த ஐஎஸ்எல் இறுதி ஆட்டத்தில் கோவா 2-3 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியிடம் தோல்வி கண்டது.
 வெற்றி கொண்டாட்டத்தின்போது தங்கள் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான தத்தாராஜ் சல்கோகரை சென்னை வீரர் இலானோ தாக்கியதாகக் கூறி கோவா அணியினர் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. இலானோ மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
 இந்த விவகாரத்தை விசாரித்த அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு, கோவா அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அணியை தவறாக வழிநடத்தியது, மோசமாக நடந்துகொண்டது, மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த அணிக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.