திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

ஐஓசி தடகள குழு உறுப்பினராக சாய்னா நெவால் நியமனம்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தடகள குழு உறுப்பினர்களில் ஒருவராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :19 அக்டோபர் 2016, 12:59 am IST

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) தடகள குழு உறுப்பினர்களில் ஒருவராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள அரிய கெüரவங்களில் இதுவும் ஒன்றாகும்.
 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் அனுப்பிய நியமனம் தொடர்பான கடிதம் சாய்னாவுக்கு திங்கள்கிழமை கிடைக்கப்பெற்றது.
 அதில், "ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் நீங்கள் (சாய்னா) போட்டியிட்டீர்கள். உரிய கலந்தாலோசனைகளுக்குப் பிறகு தற்போது, ஐஓசி தடகள குழுவின் உறுப்பினராக உங்களை நியமிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 அமெரிக்க ஐஸ் ஹாக்கி வீராங்கனை ஏஞ்செலா ருக்கைரோ தலைமையிலான ஐஓசி தடகள குழுவில் 9 துணைத் தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் அடுத்தகட்டக் கூட்டம் நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த சாய்னா, மீண்டும் தனது பயிற்சியை தொடங்க உள்ள நிலையில் அவருக்கு இத்தகயை கெüரவம் அளிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் கூறுகையில், "இது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாகும். சாய்னாவை அங்கீகரித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் அவர் அங்கம் வகிக்க வழங்கப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பு தனிச்சிறப்பானதாகும். சாய்னாவுக்காக பெருமைப்படுகிறோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.