

இந்திய கேப்டன் விராட் கோலி செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்படுகிறார்.
கோலி - அனுஷ்கா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதையொட்டி, கோலி விடுப்பில் நாடு திரும்புகிறார். அவருக்குப் பதிலாக எஞ்சிய 3 தொடர்களில் அஜிங்க்ய ரஹானே கேப்டனாகச் செயல்படுகிறார்.
இதனிடையே, இந்திய அணியும் பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்காக மெல்போர்ன் செல்கிறது. அதற்கு முன் கோலி டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியினருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. முன்னதாக, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபட இருந்த நிலையில், மழை காரணமாக பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
சிட்னியில்...
டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த ரோஹித் சர்மா, கரோனா சூழல் நடைமுறையின்படி சிட்னியில் இரு அறை குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிட்னியில் நடைபெறும் 3-ஆவது டெஸ்டில் விளையாட இருக்கும் அவர் ஜனவரி 3 முதல் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.