செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா 85வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தோல்வியடைந்தார்.