மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பாகிஸ்தான் இலங்கை முதல் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் பவுலர்கள் அபாரம்

பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

News image
Updated On :16 ஜூலை 2022, 1:24 pm IST

பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமித் கருணாரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். 

தொடக்க வீரர்கள் பெர்ணாண்டோ 35 ரன்களும், கேப்டன் கருணாரத்னே 1 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். குசால் மெண்டிஸ் 21, தனஞ்செய் 14 ரன்களும், டிக்வெல்லா 4 ரன்களும், மேத்திவ்ஸ் ரன்னேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 

தற்போது இலங்கை அணி 33 ஓவர்களுக்கு 109 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சண்டிமால் 26 ரன்களுடனும் ரமேஷ் மெண்டிஸ் 5 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில் சாஹின் அப்ரீடி 3 விக்கெட்டுகளையும், யாசிர் ஷா 2 விக்கெட்டுகளையும், ஹாசன் அலி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியே வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.