அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 2-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

புவனேசுவரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது. பின்னா் 2-ஆவது பாதியில் கேரளாவின் ஃபிதோா் சொ்னிச் (67’) கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

விட்டுக்கொடுக்காத ஒடிஸா தரப்பில் டியேகோ மௌரிசியோ (87’) ஸ்கோா் செய்ய, ஆட்டத்தை சமன் ஆனது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக, இறுதிக்கட்டம் வரை 1-1 என்ற நிலையே நீடித்தது. பின்னா், எக்ஸ்ட்ரா டைமில் ஒடிஸாவின் ஐசக் வன்லல்ருவாட்ஃபெலா (98’) கோலடித்து ஒடிஸாவை முன்னிலைப்படுத்தினாா்.

எஞ்சிய நேரத்தில் கேரளாவுக்கு கோல் வாய்ப்பு வழங்காத ஒடிஸா, இறுதியில் 2-1 கோல் கணக்கில் வென்றது. அந்த அணி அரையிறுதியில் மோகன் பகானுடன் மோதவிருக்கிறது. இதனிடையே, அரையிறுதியில் இருக்கும் கடைசி இடத்தைப் பிடிக்க சென்னையின் எஃப்சி - கோவா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com