ஐபிஎல் 2024 தொடர் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காயத்தில் இருந்து குணமடைந்து வரும் இந்திய வீரர்களின் தற்போதைய நிலை குறித்து பிசிசிஐ மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ வெளியிட்ட மருத்துவ அறிக்கை:
ரிஷப் பந்த்
கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பந்த், 14 மாத சிகிச்சை மற்றும் பயிற்சிக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் பேட்டர் - விக்கெட் கீப்பராக விளையாட தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகமது ஷமி
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, வலது கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் பிப். 26-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் பிசிசிஐ-யின் மருத்துவக் குழு கண்காணிப்பில் இருப்பதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்.
பிரசித் கிருஷ்ணா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு கடந்த பிப். 23-ஆம் தேதி இடது தொடையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளார். விரைவில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகெதமியில் பயிற்சிக்கு செல்லவுள்ளார். ஐபிஎல்லில் இந்தாண்டு பங்கேற்க மாட்டார்.
முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும், பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... கே.எல். ராகுல் நிகழ்த்திய புதிய சாதனை!

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

இது வெறும் ஆரம்பம் மட்டுமே; முகமது ஷமியை பாராட்டிய முன்னாள் வீரர்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



