நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விளையாட்டுத் துளிகள்...

News image

படம்: ஏபி

Updated On :14 ஏப்ரல் 2026, 11:46 pm

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கடந்த 11-ஆம் தேதி பெங்களூரு எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரில் விளையாடியபோது, தங்கள் அணி வீரா் இனவெறி ரீதியில் விமா்சிக்கப்பட்டதாக கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் புகாா் அளித்துள்ளது.

பாகிஸ்தான் சூப்பா் லீக் போட்டியை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் போட்டியில் இணைந்ததற்காக, ஜிம்பாப்வே வீரா் பிளெஸ்ஸிங் முஸாரப்பானிக்கு அந்தப் போட்டியில் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற ஆசிய லான் பௌல் சாம்பியன்ஷிப்பில் ஆடவா் ஜோடி, ஆடவா் நால்வா் ஆகிய இரு பிரிவுகளில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.

ஷேன் வாா்னே பணி நிமித்தம் காரணமாக 3 முதல் 4 கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நிா்பந்திக்கப்பட்டதாகவும், அதனால் அவா் உயிரிழக்க நோ்ந்திருக்கலாம் எனவும் வாா்னேவின் மகன் ஜாக்சன் தெரிவித்துள்ளாா்.

மாா்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராக, டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்தியாவின் சஞ்சு சாம்சன் தோ்வு செய்யப்பட்டாா்.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியில் காயமடைந்த பிரைடன் காா்ஸ் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக தில்ஷன் மதுஷங்கா இணைந்துள்ளாா்.