ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையே கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
காயம் காரணமாக ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 13 வீரர்களுடன் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது இந்திய அணி.