புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சிராஜுக்கு மூளையே இல்லை..! முன்னாள் இந்திய வீரர் கடும் விமர்சனம்!

முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் இந்திய வீரர் முகமது சிராஜை கடுமையாக விமர்சித்துள்ளார்.

News image

முகமது சிராஜின் கொண்டாட்டம். - படங்கள்: பிடிஐ

Updated On :10 டிசம்பர் 2024, 3:45 pm IST

முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் இந்திய வீரர் முகமது சிராஜை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தற்போது தொடர் 1-1 சமநிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த 2ஆவது டெஸ்ட்டில் சிராஜ் டிராவிஸ் ஹெட்டிடம் சண்டைக்கு சென்றது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த நிலையில் முகமது சிராஜ் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

டிராவிஸ் ஹெட் கருணையே இல்லாமல் நான்கு பக்கம் அடித்து ரன்கள் குவித்தார். சிராஜ் உனக்கு அறிவே இல்லையா? 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தவரை நீ பாராட்ட வேண்டும். அதைவிட்டு ஏதோ டக்கவுட் செய்தமாதிரி போடா என்ற சொல்லுவது சரியில்லை.

டிராவிஸ் ஹெட் அலட்சியமாக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடித்துள்ளார். 140க்கு பிறகு ஆட்டமிழக்க வைத்து என்ன பயன்? இதற்கு பெயர் ஸ்லெட்ஜிங்கா? இது வெறும் பைத்தியக்காரத்தனம் என்றார்.

சிராஜ் 2ஆவது இன்னிங்ஸில் 98 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.