
ஆகாஷ் தீப், பும்ரா அதிரடியால் ஃபாலோ-ஆன் தவிர்ப்பு..! இந்திய வீரர்கள் கொண்டாட்டம்!
இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தை தாண்டியதை கோலி, ரோஹித் கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.

ஆகாஷ் தீப், பும்ரா அதிரடியால் ஃபாலோ- ஆன் தவிர்ப்பு. - படங்கள்: எக்ஸ் / கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பிசிசிஐ.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தை தாண்டியதை கோலி, ரோஹித் கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.
ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் தொடக்கத்தில் ரோஹித் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் - ஜடேஜா சிறப்பாக விளையாடினார்கள்.
ராகுல் 84 ரன்களுக்கும் ஜடேஜா 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
ஆட்டத்தின் பல்வேறுமுறை மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.
இறுதியில் பும்ரா (10)- ஆகாஷ் தீப் (27) கூட்டணி அதிரடியாக விளையாடியதால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது. 252/9 ரன்களுக்கு 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டதுக்கு இந்திய வீரர் கோலி, பயிற்சியாளர்கள் கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.
கம்மின்ஸ் 4, ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். கம்மின்ஸ் ஓவரில் பவுண்டர் ஆகாஷ் தீப் பவுண்டரி, சிக்ஸர் அடித்து அசத்தினார்.
Akash Deep makes sure India avoid the follow-on and then smashes Pat Cummins into the second level!#AUSvIND pic.twitter.com/HIu86M7BNW
— cricket.com.au (@cricketcomau) December 17, 2024
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






