விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சர்வதேச கிரிக்கெட்டில் பென் கரண் அசத்தல் அறிமுகம்; சாம் கரணுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

ஜிம்பாப்வே அணியில் அறிமுகமாகியுள்ள பென் கரணுக்கு அறிமுக தொடர் அசத்தலானதாக அமைந்துள்ளது.

பென் கரண் - படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :27 டிசம்பர் 2024, 5:04 am IST

சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியில் அறிமுகமாகியுள்ள பென் கரணுக்கு அறிமுக தொடர் அசத்தலானதாக அமைந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக பென் கரண் அண்மையில் அறிமுகமானார். அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, ஜிம்பாப்வே அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் ஜிம்பாப்வே அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

பென் கரண் அதிரடி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியின் மூலம் ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக களமிறங்கிய பென் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 74 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம், அறிமுகப் போட்டியே அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது.

யார் இந்த பென் கரண்?

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் கரண் யார் என இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தேட ஆரம்பித்தனர். பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கரண் மற்றும் டாம் கரணின் சகோதரர் பென் கரண் என்பது தெரிய வந்தது.

28 வயதாகும் பென் கரண் நார்த்தாம்டனில் பிறந்துள்ளார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் கெவின் கரண், பென் கரணின் தந்தை ஆவார். அவர் இங்கிலாந்து அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பின், ஜிம்பாப்வேவுக்கு நகர்ந்த கெவின் கரண், அந்த நாட்டுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தொடங்கியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய கெவின் கரண், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 2005 - 2007 ஆம் ஆண்டு இடைவெளியில் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில், கெவின் கரணின் மகனான பென் கரண் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம், ஜிம்பாப்வே அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். அவரது தந்தையைப் போன்றே பென் கரணும் இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர பந்துவீச்சாளராகவும், சுட்டிக் குழந்தை எனவும் பலராலும் அறியப்பட்ட சாம் கரணும், பென் கரணும் சகோதரர்கள். இவர்களுக்கு டாம் கரண் என்ற மற்றுமொரு சகோதரரும் இருக்கிறார். இந்த சகோதரர்கள் மூவரும் குழந்தைப் பருவத்தில் ஜிம்பாப்வேவில் வளர்ந்துள்ளனர். ஆனால், சாம் கரண் மற்றும் டாம் கரண் இருவரும் இங்கிலாந்து அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.