இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தினார்.
நிதீஷ் ரெட்டியின் தந்தைக்கு பாராட்டு
பாக்ஸிங் டே டெஸ்ட்டில் நிதீஷ் ரெட்டி சதம் விளாசி அசத்திய நிலையில், இந்திய அணி நிதீஷ் ரெட்டி என்ற மாணிக்கத்தை கண்டெடுக்க காரணமாக இருந்துள்ளீர்கள் என நிதீஷ் ரெட்டியின் தந்தை முத்யாலு ரெட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

சுனில் கவாஸ்கர்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நிதீஷ் குமார் ரெட்டியின் தந்தை முத்யாலு ரெட்டி மிகப் பெரிய தியாகங்களை செய்து அவரது மகன் நிதீஷ் ரெட்டியின் இந்த கிரிக்கெட் பயணத்துக்கு ஆதரவாக இருந்துள்ளார். முத்யாலு ரெட்டியின் தியாகங்கள் என்னை கண்கலங்கச் செய்கிறது. முத்யாலு ரெட்டியின் தியாகத்தால் இந்தியா நிதீஷ் ரெட்டி என்ற மாணிக்கத்தை கண்டெடுத்துள்ளது என்றார்.
நிதீஷ் ரெட்டியின் சதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாவது: நிதீஷ் ரெட்டியின் சதம் குறித்து பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. எனது கண்களில் கண்ணீர் ததும்பியது. அவ்வளவு எளிதாக என் கண்களில் கண்ணீர் வராது. நிதீஷ் ரெட்டியின் ஆட்டத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் என்றார்.
இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது களமிறங்கிய நிதீஷ் ரெட்டி 189 பந்துகளில் 114 ரன்கள் (11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி விலகல்!

அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்த வீரர்கள்; முன்னாள் இந்திய கேப்டன் பாராட்டு!

கேப்டன் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவை நீக்கியது நியாயமா? கங்குலி கூறியதென்ன?
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!



