இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
முதல் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இந்தியா ஏ அணியுடன் ஆடவிருந்தது. அதை ரத்து செய்துள்ளது பிசிசிஐ அணி.
இதனை முன்னாள் வீரரும் தொடருக்கு பெயர் காரணமான சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிச்சைக்காரர்களின் நம்பிக்கை
இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியினை ரத்து செய்தது பிச்சைக்காரர்களின் நம்பிக்கை எனலாம். ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஆடுகளத்தின் நடுவில் நின்று நேரமெடுத்து பந்தினை நடு பேட்டில் அடிக்கும் உணர்வு எங்குமே கிடைக்காது.
எவ்வளவுதான் வலைப்பயிற்சியில் பயிற்சி செய்தாலும் கிரீஸில் நின்று விளையாடும்போது வரும் பேட்டின் வேகம், அதன் இயல்பு தன்மை வேறெங்கும் கிடைக்காது.
இந்திய அணி காயம் ஏற்படுவதால் விளையாடவில்லை எனக் கூறுவது சரிதான். ஏன் வலைப்பயிற்சியில் காயம் ஏற்படாதா?
போட்டியில் விளையாடுவது போல் வராது
ஒருவர் வலைப்பயிற்சியில் விளையாடும்போது 3,4 முறை ஆட்டமிழந்தாலும் அடுத்து விளையாடலாம் என்ற எண்ணம் இருக்கும். ஒரு அழுத்தமும் இருக்காது. ஆனால் போட்டியில் அப்படியில்லை.
அதேபோல பந்துவீச்சாளர்களுக்கும் முறையான ஓடும் முறை, நோ பால் வீசாமல் இருக்கும் கவனம், எந்த இடத்தில் பந்தினை ஃபிட்ச் செய்வது என ஆடுகளத்தில் விளையாடும்போதுதான் வரும். அந்த மனப்பாங்கும் கற்றலும் வலைப்பயிற்சியில் வரவே வராது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூர்யவன்ஷிக்காக டி20 உலகக் கோப்பை ஹீரோ சாம்சனை நீக்குவதா? முன்னாள் வீரர் கூறுவதென்ன?

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓய்வே தேவையில்லை: முன்னாள் இந்திய வீரர்

அணியின் நலனுக்கு முன்னுரிமையளித்த வீரர்கள்; முன்னாள் இந்திய கேப்டன் பாராட்டு!







