புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முந்தைய தோல்வி குறித்து கவலையில்லை..! பும்ரா அதிரடி!

இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா நியூசிலாந்து உடனான தோல்வி குறித்து பேசியுள்ளார்.

News image

ஜஸ்ப்ரீத் பும்ரா

Updated On :21 நவம்பர் 2024, 6:57 am

DIN

இந்திய அணி நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் 0-3 என வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து ஆஸி. உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா வந்துள்ளது.

நாளை (நவ.22) நடைபெறவுள்ள முதல் டெஸ்ட்டுக்கு இந்தியாவின் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா செயல்படவிருக்கிறார்.

ரோஹித் சர்மா மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்தியாவில் இருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியதாவது:

நீங்கள் வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியினை பூஜ்யத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். அதேபோல் தோல்வியடைந்தாலும் பூஜ்யத்திலிருந்தே தொடங்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்ட தோல்வியின் நினைவுகள் எதையும் நாங்கள் இங்கு கொண்டுவரவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியிலிருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுள்ளோம். ஆனால், அது மாறுபட்ட சூழ்நிலை. தற்போது இருக்கும் சூழ்நிலை வேறுமாதிரியானது.

பிளேயிங் லெவனை முடிவு செய்துவிட்டோம். நாளை காலை உங்களுக்கு அது தெரியவரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.