கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

திரும்பி வந்துட்டேனு சொல்லு... அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே!

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

News image

படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)

Updated On :24 நவம்பர் 2024, 7:35 pm IST

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா (ரைட் டூ மேட்ச்), ராகுல் திரிபாதி ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உண்மையாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.