இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற மேற்கோளுடன் தனது தந்தை, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்ஃப்ராஸ் கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரோமனா ஜாஹூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சர்ஃப்ராஸ் கான் கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் அனில் கும்ப்ளேவிடம் இந்திய அணியின் தொப்பியை வாங்கும் போது அவரது மனைவியும், தந்தையும் கண்ணீர்விட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தினர்.
சர்ஃப்ராஸ் கானின் இன்ஸ்டாகிராம் பதிவு
முன்னதாக, பெங்களூருவில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃப்ராஸ் கான் 150 ரன்கள் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார்.
இதுவரை இந்திய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் சர்ஃப்ராஸ் கான் 350 ரன்கள் குவித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மாற்றுவீரராக இருந்த சர்ஃப்ராஸ் கானுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
கடந்த மாதம் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி சர்ஃபராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். அதன்பின்னர் அக்டோபர் 2 ஆம் தேதி நடந்த இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சர்ஃப்ராஸ் கான் இரட்டைசதம் விளாசினார். மேலும், விபத்தில் சிக்கிய தனது தம்பிக்காக இரட்டை சதம் அடித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்று (அக்டோபர். 22) தனது 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சர்ஃப்ராஸ் கானுக்கு இணையதளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஓடிஐ! ஆப்கன் பந்துவீச்சு தேர்வு... பிரின்ஸ் யாதவ் அறிமுகம்!!

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்

முல்லான்பூர் டெஸ்ட்: மானவ் சுதர் சிக்ஸருடன் 500 ரன்களைக் கடந்த இந்தியா!







