சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சூர்யகுமாரின் சாதனையை முறியடித்த சிக்கந்தர் ராஸா..!

டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் சாதனையை முறியடித்தார் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா.

சிக்கந்தர் ராஸா - படம்: எக்ஸ் / பஞ்சாப் கிங்ஸ்.

Published On :23 அக்டோபர் 2024, 9:40 pm IST

டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் சாதனையை முறியடித்தார் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஸா.

டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 344/4 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தது ஜிம்பாப்வே அணி.

பின்னர் 14.4 ஓவர்களில் காம்பியா 54 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிக்கந்தர் ராஜா 43 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 15 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிக முறை (17) ஆட்ட நாயகன் விருதுபெற்றவர் என்ற சாதனையை சிக்கந்தர் ராஸா பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 16 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே போன்ற ஒரு நாட்டின் வீரர் இந்த உலக சாதனை படைப்பது மிகப்பெரிய விஷயம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகிறார்கள்.

டி20யில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்கள்

சிக்கந்தர் ராஸா - 17

சூர்யகுமார் யாதவ் - 16

விராட் கோலி - 16

விராந்தீப் சிங் -16

ரோஹித் சர்மா - 14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.