ராவல்பிண்டியில் வரலாற்று சாதனை படைத்த சஜித் கான்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.
சஜித் கான்
சஜித் கான்Anjum Naveed
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24இல் ராவல்பிண்டியில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 344 ரன்கள் குவித்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் தனது 2ஆவது இன்னிங்ஸில் விளையாடவிருக்கிறது.

இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் சஜித் கான் 4, நோமன் அலி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். முதல் இன்னிங்ஸில் சஜித் கான் 6, நோமன் அலி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

மொத்தமாக சஜித் கான் 10 விக்கெட்டுகள், நோமன் அலி 9 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.

ராவல்பிண்டி மைதானத்தில் ஒரு சுழல்பந்து வீச்சாளர் 10 விக்கெட்டுகள் எடுப்பது இதுவே முதல்முறை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com