நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த ஃபீல்டர் விருது..! ராதா யாதவ் தேர்வு!

நியூசி. உடனான தொடரில் சிறந்த ஃபீல்டர் விருதினை பெற்றார் ராதா யாதவ்.
ராதா யாதவ்.
ராதா யாதவ்.படங்கள்: எக்ஸ் / பிசிசிஐ மகளிர்.
Published on
Updated on
1 min read

நியூசிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய மகளிா் அணி.

இந்த ஆட்டத்தில் முதலில் நியூசி. 49.5 ஓவா்களில் 232 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 44.2 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியில் ராதா யாதவ் சிறப்பாக ஃபீல்டி செய்தார்.

6 மகளிர்கள் சிறந்த ஃபீல்டிங்குக்காக அண்யில் தேர்வாகியிருந்தார்கள். இறுதியில் ராதா யாதவ் வெற்றி பெற்றார்.

இதை விடியோவாக பிசிசிஐ மகளிர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையிலும் ராதா யாதவ் சிறப்பாக ஃபீல்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com