காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சரிவிலிருந்து மீட்ட டிம் டேவிட்... 109 மீட்டருக்கு சிக்ஸர்!

டிம் டேவிட் அரைசதம் அடித்தது குறித்து...

News image

109 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த டிம் டேவிட். - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்.

Updated On :10 ஆகஸ்ட் 2025, 4:03 pm IST

ஆஸ்திரேலிய பேட்டர் டிம் டேவிட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டி20யில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதிரடியாக தொடங்கிய ஆஸி. அணி முதல் 7.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் குவித்தது.

டாப் ஆர்டர் பேட்டர்கள் விரைவாகவே ஆட்டமிழந்ததால் டிம் டேவிட் பொறுமையாக விளையாட வேண்டிய சூழல் உருவாகியது.

பொறுமையாக விளையாடிய டிம் டேவிட் செனுரன் முத்துசாமி ஓவரில் (11.1) திடலை விட்டு வெளியே அடித்தார். இந்த சிக்ஸை அடிக்கும்போது 140.3 கி.மீ./மணி வேகத்தில் 109 மீட்டர் தூரத்துக்கு அடித்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டிம் டேவிட் அதிவேக அரைசதம், சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

டிம் டேவிட் தனது 7ஆவது அரைசதத்தினை 29-ஆவது பந்தில் நிறைவு செய்தார்.

தற்போது, ஆஸி. அணி 14.4 ஓவர்களில் இந்த பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.