அலிசா ஹீலி அதிரடி சதம்: ஆஸி. மகளிரணி ஆறுதல் வெற்றி!
இந்திய மகளிா் ‘ஏ’ அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் ‘ஏ’ அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு இது ஆறுதல் வெற்றியாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 47.4 ஓவா்களில் 216 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஆஸ்திரேலியா 27.5 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. ஷஃபாலி வா்மா 7 பவுண்டரிகளுடன் 52, யஸ்திகா பாட்டியா 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனா். இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஆஸ்திரேலிய தரப்பில் டாலியா மெக்ராத் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் டாலியா மெக்ராத் 59 ரன்களுக்கு வெளியேற, அலிசா ஹீலி 23 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 137 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். உடன், ரேச்சல் டிரெனாமேன் 21 ரன்களுடன் துணை நின்றாா். இந்திய பௌலா்களில் ராதா யாதவ் விக்கெட் சாய்த்தாா்.