நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

அதிரடியாக ஆடிய பிரெவிஸை மெய்டன் செய்த ஆடம் ஸாம்பா..! வீழ்த்திய கானோலி!

ஆஸி. வீரர் ஆடம் ஸாம்பாவின் சிறப்பான ஓவர் குறித்து...

Zamba, Brevis, Connolly.

ஸாம்பா, பிரெவிஸ், கானோலி. - படங்கள்: ஜியோ ஹாட்ஸ்டார்.

Published On :24 ஆகஸ்ட் 2025, 3:44 pm IST

தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரெவிஸை ஆஸி. வீரர் ஆடம் ஸாம்பா மெய்டன் செய்து அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டெவால்டு பிரெவிஸ் 15 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார்.

ஆடம் ஸாம்பா வீசிய போட்டியின் 15-ஆவது ஓவரில் டெவால்ட் பிரெவிஸ் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அதற்கு முந்தைய ஓவரில் விக்கெட் விழுந்ததால், அவர் மிகவும் பொறுமையாக விளையாடினார்.

அடிக்க முயன்றும் அவரால் ஒரு ரன்கூட எடுக்கமுடியவில்லை. அதிவேக அரைசதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடம் ஸாம்பா அதற்கு வேகத்தடையாக அமைந்தார்.

இந்தப் போட்டியில் இதுதான் முதல் மெய்டன் ஓவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓவரில் 14.4 ஆவது பந்தில் எல்பிடபிள்யூ கேட்கப்பட்டது. ஆனால், பந்து பேட்டில் பட்டதால் பிரெவிஸ் தப்பித்தார்.

அதற்கடுத்த ஸாம்பா ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து, 49 ரன்களில் கூப்பர் கானோலி ஓவரில் ஆட்டமிழந்தார்.

பிரெவிஸ் ஆக்ரோஷமாக வெளியேற, கானோலி வில் - அம்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

வில் - அம்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கானோலி.

வில் - அம்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கானோலி. - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்.

17.2 ஓவரில் தெ.ஆ. 124/6 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. களத்தில் போஷ், வியான் முல்டர் விளையாடி வருகிறார்கள்.

Summary

South African pacer Dewald Previs was stunned by Australian player Adam Zampa's maiden over.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.