ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!

தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் திரிபுரா அணியில் இணையவுள்ளதைப் பற்றி...

கேப்டன் விஜய் சங்கர் - (கோப்புப் படம்)

Published On :27 ஆகஸ்ட் 2025, 12:36 pm IST

தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் திரிபுரா அணியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் லெவனில் விளையாடி வந்த, தமிழக அணியின் முன்னாள் கேப்டன் விஜய் சங்கர் திடீரென விலக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அணிக்காக ரஞ்சி டிராபி, ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் தற்போது சென்னை அணிக்காக விளையாடி வரும் விஜய் சங்கர் 2011 - 2012 ஆம் ஆண்டில் தமிழக அணிக்காக முதல்தரப் போட்டிகளில் அறிமுகமானார்.

மகாராஷ்டிரத்துக்கு எதிரான புச்சி பாபு போட்டியின் 34 வயதான விஜய் சங்கருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு, முதல் இரண்டு ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட தவறிய விஜய் சங்கர், சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் சில போட்டிகளைத் தவறவிட்டார்.

2024 - 2025 ரஞ்சி டிராபியில், சத்தீஸ்கர் மற்றும் சண்டீகருக்கு எதிரான இரண்டு சதங்கள் உள்பட அவர் 52.88 சராசரியுடன் 476 ரன்கள் எடுத்திருந்தார்.

கடந்தாண்டு மூத்த வீரரான பாபா அபராஜித், கேரளத்தில் சேர்ந்த பிறகு, தமிழக அணியில் வெளியேறும் 2-வது மூத்த வீரர் விஜய் சங்கர்.

இதுவரை 70 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள விஜய் சங்கர், 45.14 சராசரியில் 3,702 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 11 சதங்களுடன், 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Summary

Vijay Shankar set to leave Tamil Nadu after 13-year stint, will join Tripura

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.