‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஐசிசி தரவரிசையில் விராட் கோலி 2 இடங்கள் முன்னேற்றம்..! மீண்டும் முதலிடம் பிடிப்பாரா?

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை வெளியானது குறித்து...

Virat Kohli celebrates after scoring a century

சதம் விளாசிய மகிழ்ச்சியில் விராட் கோலி - படம் | பிசிசிஐ

Published On :

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி இரண்டாம் இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இதற்கு முன்பாக நான்காவது இடத்தில் இருந்தார். தற்போது, இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார்.

டி20, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவருமே ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள்.

இருவருமே, ஒருநாள் போட்டிக்கான ஐசிசியின் தரவரிசையில் முதலிரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளார்கள்.

2021க்குப் பிறகு விராட் கோலி நம்.1 இடத்துக்கு வரவே இல்லை. அதன்பிறகு பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கோலியின் இடத்தைப் பிடித்திருந்தார்.

தற்போது, இந்தியாவின் ரோஹித் சர்மா முதலிடத்தில் நீண்ட நாள்களாக நீடிக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்றார்.

இதனைத் தொடர்ந்து தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை

1. ரோஹித் சர்மா - 781 புள்ளிகள்

2. விராட் கோலி - 773 புள்ளிகள்

3. டேரில் மிட்செல் - 766 புள்ளிகள்

4. இப்ரஹிம் சத்ரான் - 764 புள்ளிகள்

5. ஷுப்மன் கில் - 723 புள்ளிகள்

6. பாபர் அசாம் - 722 புள்ளிகள்

Summary

Indian batsman Virat Kohli has moved up to second place in the ICC ODI rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.