நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அதிவேக இரட்டைச் சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி..! ரசிகர்கள் ஏமாற்றம்!

அதிரடியாக விளையாடிய யு-19 இந்திய வீரர் சூர்யவன்ஷி குறித்து...

Vaibhav Suryavanshi expresses joy after scoring a century

வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ

Published On :

யு-19 ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இரட்டைச் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தார்.

இந்திய ரசிகர்கள் இவர் இரட்டைச் சதம் அடிப்பாரென பெரிதும் எதிர்பார்த்திருந்து, ஏமாற்றம் அடைந்தனர்.

யு-19 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவும் யுஎஇ அணியும் துபையில் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற யுஎஇ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை தொடக்கினார்.

சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 9 பவுன்டரிகள், 14 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிவேக இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் ரிஷப் பந்த் போல முட்டிப்போட்டி பின்புறம் அடிக்கும்போது ஆட்டமிழந்தார்.

126 பந்துகளில் இஷான் கிஷான் அடித்ததே அதிவேக இரட்டைச் சதமாக இருக்கிறது. தற்போது, இந்திய அணி 40 ஓவர்களில் 311/3 ரன்கள் எடுத்துள்ளது.

Summary

Indian player Vaibhav Suryavanshi, who played brilliantly in the U-19 Asia Cup, was dismissed without scoring a double century.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.