காற்று மாசு: லக்னௌவில் நடைபெற இருந்த நான்காவது டி20 போட்டி புகை மற்றும் கடுமையான பனிமூட்டத்தினால் ரத்து செய்யப்பட்டது.
இந்தப் போட்டிக்கு முன்பாக ஹார்திக் பாண்டியா மாஸ்க் அணிந்திருந்ததை வட மாநிலத்தவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி லக்னௌவில் நடைபெற இருந்தது. போட்டி ரத்தானதால் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
கடைசி போட்டியில் தெ.ஆ. வென்றால் மட்டுமே டி20 தொடர் சமன்செய்யப்படும். எப்படியும் இந்தியாவுக்கு தோல்வி கிடையாது என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
இருப்பினும் போட்டி ரத்தானது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
Hardik Pandya's mask was sponsored by George Soros to defame Yogi govt. pic.twitter.com/LbSvqSN1yl
— Mohammed Zubair (@zoo_bear) December 17, 2025
இந்தியாவை அவமதித்து விட்டதாக சிலர் எக்ஸ் பக்கத்தில் ஹார்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஏற்கெனவே, தில்லியில் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், காற்று மாசுபாடு எதுவும் இல்லை, ஹார்திக் பாண்டியாவின் செயல் சொந்த நாட்டை அவமதித்து விட்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
சிலர் மோசமான காற்றின் சூழ்நிலை வீரர்களுக்கு ஆபத்து என்றும் ஹார்திக் செயலுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.
ð¨Can you IMAGINE?
— Mohit Chauhan (@mohitlaws) December 17, 2025
The 4th T20i match between India and South Africa delayed due to pollution in Lucknow.
Hardik Pandya was seen wearing a face mask.
It is very dangerous for players to play in this deadly toxic air. pic.twitter.com/IiGLnxKPlb
இதனால், தேசிய அளவில் ஹார்திக் பாண்டியா டிரெண்டிங்கில் இருந்தார்.
குளிர்காலங்களில் ஏன் போட்டிகளை வட மாநிலங்களில் நடத்த வேண்டுமென சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். கடைசி போட்டி அகமதாபாதில் டிச.19-இல் நடைபெற இருக்கிறது.
Summary
The fourth T20 match, which was scheduled to be held in Lucknow, was cancelled due to smoke and dense fog.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்திய ஹார்திக் பாண்டியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா இல்லை! காரணம் கூறாத பிசிசிஐ!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!

முழு உடல்தகுதி பெற்ற ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா; ஒருநாள் தொடருக்குத் தயார்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



