அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் நடத்தப்படவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

படம் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :21 டிசம்பர் 2025, 7:50 pm IST

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் நடத்தப்படவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்தியது. அறிமுக சீசனுக்குப் பிறகு பல்வேறு காரணங்களால் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரை நடத்த முடியவில்லை.

இந்த நிலையில், மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் நடத்தப்படவுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்று விளையாடும் வகையில் தொடர் வடிவமைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் முக்கிய வீரர்கள் பலரும் இடம்பெற்று விளையாடவுள்ளனர். மேலும், வெளிநாட்டு வீரர்கள், திறமைவாய்ந்த உள்ளூர் வீரர்களும் இடம்பெற்று விளையாடவுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் பயணத்தில் இந்த பிரீமியர் லீக் மிக முக்கியமான முன்னெடுப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டபோது, கிறிஸ் கெயில், பிரண்டன் மெக்கல்லம் மற்றும் ஷாகித் அஃப்ரிடி போன்ற பிரபல வீரர்கள் பலரும் அந்த தொடரில் இடம்பெற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Summary

The Afghanistan Cricket Board has announced that the Afghanistan Premier League will be held again.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.