டி20 உலகக் கோப்பையில் முன்னாள் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவரா என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
தற்போதைக்கு கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம் என ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 3-0 என தொடரை வென்றது. முதலிரண்டு போட்டிகளில் விளையாடாத கம்மின்ஸ், மூன்றாவது போட்டியில் மட்டும் விளையாடினார்.
மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து கம்மின்ஸ் விலகுவதாகக் கூறியுள்ளார்.
அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை வரவிருக்கிறது. சமீப காலங்களில் கம்மின்ஸ் ஆஸி.யின் டி20 அணியில் விளையாடாமல் இருக்கிறார்.
அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
டி20 உலகக் கோப்பையில் சந்தேகம்...
இந்நிலையில், இது குறித்து ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியதாவது:
உலகக் கோப்பைக்காக மிகவும் எதிர்பார்த்திருக்கிறோம். கம்மின்ஸ் இருப்பாரா அல்லது இல்லையா என்பதை சொல்ல முடியாது.
இப்போதைக்குச் சொல்வதானால் சந்தேகம் என்றே சொல்ல முடியும். இருந்தும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என முன்பே திட்டமிட்டு இருந்தோம்.
ஆஷஸ் தொடரை வெல்வதே இலக்கு...
நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். இந்தப் புதிய அணிக்கான கட்டுமானத்தை மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.
தற்போதைக்கு தொடரை வெல்ல வேண்டும். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது.
இனிமேலும் கம்மின்ஸை வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது. அவருக்கும் இதில் உடன்பாடு இருக்கிறது என்றார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்.7 முதல் மார்ச்.8ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
பிப்.11ஆம் தேதி ஆஸி. அயர்லாந்தை எதிர்த்து இலங்கை திடலில் விளையாட இருக்கிறது.
Summary
Australia skipper Pat Cummins' chances of playing at next year's T20 World Cup in India and Sri Lanka are "quite grey at the moment" as he battles a back stress issue that has affected his participation in the ongoing Ashes series against England.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நான்கு அணிகள்!

முதல் பாதிக்குப் பிறகு 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட பிரான்ஸ் - இராக் போட்டி..! உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை!

15 கோல்களைத் தடுத்து, உலகச் சாதனையில் இடம்பிடித்த கோல்கீப்பர்!

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




