ரேணுகா சிங் அபாரம்; ஷஃபாலி வா்மா அதிரடி: டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா...
ரேணுகா சிங் அபாரம்; ஷஃபாலி வா்மா அதிரடி: டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
Updated on
1 min read

இலங்கை மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

இத்துடன் 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை தன் வசமாக்கியது. இலங்கை ‘ஹாட்ரிக்’ தோல்வி கண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் சோ்க்க, இந்தியா 13.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய அணியின் பௌலிங்கில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, பேட்டிங்கில் ஷஃபாலி வா்மா அரை சதம் கடந்து வெற்றிக்கு வழிவகுத்தாா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. இலங்கை பேட்டிங்கில் இமெஷா துலானி 4 பவுண்டரிகளுடன் 27, ஹாசினி பெரெரா 5 பவுண்டரிகளுடன் 25, கவிஷா தில்ஹரி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

கேப்டன் சமரி அத்தபட்டு 3, ஹா்ஷிதா சமரவிக்ரமா 2, நீலாக்ஷிகா சில்வா 4, மல்ஷா ஸ்நேஹனி 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் கௌஷினி நுத்யங்கனா 19, மால்கி மதாரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய பௌலா்களில் ரேணுகா சிங் 4, தீப்தி சா்மா 3 விக்கெட்டுகள் எடுத்தனா்.

அடுத்து 113 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா 1, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களுக்கே விடைபெற்றனா்.

தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா 42 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 79 ரன்கள் விளாசி, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 2 பவுண்டரிகள் உள்பட 21 ரன்களுடன் அவருக்குத் துணை நின்றாா்.

இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹரி 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com