இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி மகராஷ்டிரத்தின் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் முறையே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான இருதரப்பு ஒருநாள் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை முந்தி முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமானதிலிருந்து, அவர் 198 போட்டிகளில் 35.85 சராசரியுடன் 222 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இருதரப்பு போட்டிகளில் மொத்தமாக 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் 40 விக்கெட்டுகளும், ஆண்ட்ரூ பிளின்டாஃப் 37 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 36 விக்கெட்டுகளும், ஜவகல் ஸ்ரீநாத் / ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் 35 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.
மேலும், ஒரு சாதனையாக ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளையும் எட்டி, இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கபில்தேவுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகளை எடுத்த 2-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லார்ட்ஸில் 3-வது ஒருநாள்: தொடரை வெல்லப்போவது யார்?

லாா்ட்ஸ் ஆட்டத்துடன் ரோஹித் சா்மா ஓய்வு?

ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

இந்தியா பந்துவீச்சு: மூத்த வீரர்களான ரோஹித், கோலி, கே.எல். ராகுல் சேர்ப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



