ஆஸி. வீராங்கனை எல்லிஸ் பெர்ரி அணியில் இணைந்ததாக ஆர்சிபி அணி வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.
பிரபல ஆஸி. வீராங்கனை எல்லிஸ் பெர்ரி ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார். இந்தாண்டு டபிள்யூபிஎல் போட்டிகளில் காயம் காரணமாக கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் அதை மறுக்கும் வகையில் ஆர்சிபி அணி விடியோ வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு டபிள்யூபிஎல் பிப்.14ஆம் தேதியன்று தொடங்குகிறது. முதல் நாளில் ஆர்சிபி அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியில் முக்கியமான வீராங்கனையாக இருக்கும் எல்லிஸ் பெர்ரி, கடந்த டபிள்யூபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
காயம் ஏற்பட்டது எப்படி?
இங்கிலாந்துடனான பிங்க் பந்து கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கின்போது தனது இடது பக்கம் கீழே விழுந்தபோது காயம் ஏற்பட்டு வெளியேறினார்.
இருப்பினும் பேட்டிங் விளையாடி அசத்தினார். இங்கிலாந்துடனான தொடரை வென்று அசத்திய மகளிர் ஆஸ்திரேலிய அணி.
இந்த நிலையில் காயத்தினால் அவதிப்பட்டு வந்ததால் எல்லிஸ் பெர்ரி டபிள்யூபிஎல் தொடரில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியன.
அதிரடி வருகை
அதனால் ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எல்லிஸ் பெர்ரி ஆர்சிபி அணியில் இணைந்தார்.
மாஸாக அவர் அணியில் இணைந்ததை விடியோவாக வெளியிட்டுள்ளது ஆர்சிபி அணி. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த டபிள்யூபிஎல் தொடரில் எல்லிஸ் பெர்ரி 9 போட்டிகளில் 347 ரன்கள், 125.72 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினார். அதில் 2 அரைசதங்கள் அடங்கும்.
எல்லிஸ் பெர்ரி அணியில் இணைந்தது ஆர்சிபி ரசிகர்களை ஆனந்த பெருமூச்சு விடவைத்துள்ளது
ð§ðµð² ðð¢ðð§ ð¶ð ðµð²ð¿ð² ð®ð»ð± ððµð®ðâð ððµð² ð¯ð¼ððð¼ðº ð¹ð¶ð»ð², ð°ð®ððð² ðð² ðð®ð¶ð± ðð¼! ð
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 11, 2025
Ellyse Perry arrives match ready for #WPL2025. This is Royal Challenge presents RCB Shorts.#PlayBold #ನಮà³à²®RCB #SheIsBold pic.twitter.com/hzv1A1LwGZ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
யார் இந்த சரண்ஷ்? இந்திய டெஸ்ட் அணியில் 33 வயது ஆல்ரவுண்டர்!

காவல்துறை வாகனத்தை தனியொரு ஆளாக தடுத்து நிறுத்திய பெண்! வைரலாகும் விடியோ

அதிர்ச்சி தோற்றம்! நடிகர் சல்மான் கானுக்கு என்ன ஆனது?

அழுத்தத்தை இப்படிதான் கையாள்கிறேன்; ரகசியம் பகிர்ந்த ஷுப்மன் கில்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



