குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சமனில் முடிந்தும் அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா..! எப்படி சாத்தியம்?

ரஞ்சி கோப்பை காலிறுதியில் விளையாடிய கேரள, ஜம்மு-காஷ்மீர் அணிகள் போட்டி சமனில் முடிவடைந்தது.

News image

கேரள அணி. - படம்: எக்ஸ் / கேசிஏ

Updated On :12 பிப்ரவரி 2025, 6:16 pm IST

ரஞ்சி கோப்பை காலிறுதியில் விளையாடிய கேரள, ஜம்மு -காஷ்மீர் அணிகள் போட்டி சமனில் முடிவடைந்தது. இருப்பினும் கேரள அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ரஞ்சி கோப்பை போட்டிகள் அக்.11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. தற்போது காலிறுதி போட்டிகள் முடிவடைந்துள்ளன.

காலிறுதி 1இல் ஜம்மு காஷ்மீர், கேரள அணிகள் மோதின. ஜம்மு காஷ்மீர் முதல் இன்னிங்ஸில் 280 ரன்கள் எடுக்க கேரள அணி 281 ரன்கள் எடுத்தது.

அடுத்து 2ஆவது இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மீர் 399/9 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக கேரள அணி 295/6 ரன்கள் எடுக்க 5நாள் ஆட்டம் சமனில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

சமனில் முடிந்தும் அரையிறுதிக்கு முன்னேறியது எப்படி?

இருப்பினும் முதல் இன்னிங்ஸில் கேரள அணி 1 ரன் முன்னிலை பெற்றதால் அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

112*ரன்கள் (172 பந்துகள்) 44* ரன்கள் (162 பந்துகளில்) எடுத்த கேரள அணியைச் சேர்ந்த சல்மான் நிஜார் இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாகதேர்வானார்.

அரையிறுதிப் போட்டிகள்

பிப்.17ஆம் தேதி கேரளா, குஜராத் அணிகளும் விதர்பா, மும்பை அணிகளும் அரையிறுதியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிகளில் பிப்.26ஆம் தேதி விளையாடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.