இலங்கை உடனான தொடரில் தோல்வியடைந்தாலும் இளம் வீரர்களை நம்புவதாக ஸ்மித் கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.
ஆஸி. அணியின் தொடக்க வீரராக இளம் வீரர் ஜேக் பிரேசர் -மெக்கர்க் ( ஜேஎஃப்எம்) களமிறங்கினார். டி20யில் கலக்கிய இவர் ஒருநாள் போட்டிகளில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
22 வயதாகும் ஜேஎஃப்எம் 2 போட்டிகளில் 11 (2,9) ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசி போட்டியில் ஆஸி. 174 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
திறமை இருக்கிறது
சாம்பியன்ஸ் டிராபி ஆஸி. அணியில் ஜேஎஃப்எம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஸ்மித் கூறியதாவது:
ஜேஎஃப்எம் அதிரடியான வீரர். அவருக்கு திடலில் அனைத்து இடங்களிலும் அடிக்கும் திறமை இருக்கிறது. அவர் சரியான நேரத்தில் பந்தினை அடிக்க முயற்சிக்க வேண்டும். ஆனாலும் கடைசி போட்டியில் அவர் சில சிறப்பான ஷாட்டுகளை அடித்தார்.
ஜேக் பிரேசர்-மெக்கர்க்கிடம் திறமை இருக்கிறது. அதனால்தான் அவரை அணியில் எடுத்துள்ளோம்.
ஜேஎஃப்எம் மிகவும் ஆபத்தான கிரிக்கெட்டர். பாகிஸ்தான் ஃபிட்ச் அவருக்கு மிகவும் உதவும். அணியுடன் இருந்து அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்வார் என நினைக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திறமை தேடல் தோ்வு முடிவுகள்: திருத்தங்களை அனுப்பலாம்

கார்த்திக் சர்மாவை நினைத்து பெருமைப்படுகிறோம்; சிஎஸ்கே பயிற்சியாளர் பாராட்டு!

36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?







