ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர்..! வரலாற்றுச் சாதனை!

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரள அணி வலுவான நிலையில் உள்ளது.
முகமது அசாரூதின்
முகமது அசாரூதின்படம்: ஐஏஎன்எஸ்
Published on
Updated on
1 min read

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரள அணி வலுவான நிலையில் உள்ளது.

ரஞ்சி கோப்பை அரையிறுதியில் கேரளா, குஜ்ராத் அணிகள் மோதுகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும் கேரள அணி 2ஆம் நாள் முடிவில் 418/7 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் முகமது அசாரூதின் 149* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ரஞ்சி அரையிறுதியில் சதமடித்த முதல் கேரள வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

கேரள அணியில் சச்சின் பேபி 69, சல்மான் நிஜார் 52 ரன்களும் எடுத்தார்கள்.

குஜராத் சார்பில் அர்ஜன் நாக்வாஸ்சல்லா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இது அசாரூதினின் 2ஆவது முதல்தர சதமாகும். 7 ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

303 பந்துகளில் 149 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 17 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் இவர் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கேரளாவின் ஸ்கோர் கார்டு

அக்‌ஷய் சந்திரன் - 30

ரோஹன் குன்னம்மல் - 30

வருண் நாயனார் - 10

சச்சின் பேபி - 69

ஜலஜ் சக்சேனா - 30

முகமது அசாரூதின் - 149*

சல்மான் நிஜார் - 52

அஹ்மது இம்ரான் - 24

ஆதித்யா சர்வாத் -14*

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com