பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்.! வங்கதேச வீரர்கள் புதிய சாதனை!

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

தவ்ஹித் ஹிரிதாய் - ஜேக்கர் அலி..

Published On :

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்தியா- வங்கதேசம் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் சந்தோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் கேப்டன் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் சந்தோ ரன்கள் ஏதுமின்றி 0 ரன்னில் வெளியேறினார்.

35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி பரிதாபமான நிலையில் இருந்தது. அதன்பின்னர், ஜோடி சேர்ந்த தவ்ஹித் ஹிரிதாய் - ஜேக்கர் அலி இருவரும் அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். இவர்களின் விக்கெட்டை எடுக்க இந்திய வீரர்களும் திணறினர்.

ஜேக்கர் அலி 68 ரன்களில் இருந்தபோது முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தவ்ஹித் ஹிரிதாய் - ஜேக்கர் அலி இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் குவித்தனர். மேலும், இந்தியாவுக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு 150 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த முதல் வங்கதேச ஜோடி என்ற புதிய சாதனையையும் இந்த ஜோடி படைத்தனர்.

இதற்கு முன்னதாக, 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஜேக்கர் அலி - மஹமத்துல்லா இருவரும் 150 ரன்கள் சேர்த்ததே இதுவரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.