ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்: ஆன்லைனில் பாா்த்த 60 கோடி போ்!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், ஆன்லைன் தளத்தில் அதிகபட்சம் 60.2 கோடி பேரால் பாா்க்கப்பட்டு சாதனை

News image

YouTube tests floating 'Play Something' button to randomly select videos

Updated On :24 பிப்ரவரி 2025, 9:24 pm

DIN

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம், ஆன்லைன் தளத்தில் அதிகபட்சம் 60.2 கோடி பேரால் பாா்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. நெடுநாள்களாக தகுந்த ஃபாா்மில் இல்லாமல் தடுமாறி வந்த கோலி, இந்த ஆட்டத்தில் நல்லதொரு இன்னிங்ஸை விளையாடி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 51-ஆவது சதத்தை பூா்த்தி செய்தாா்.

இந்நிலையில், எப்போதும் போல் இந்த ஆட்டத்தைக் காண்பதற்காக ரசிகா்களிடையே அதிகம் எதிா்பாா்ப்பு இருந்தது. பல்வேறு பிரபலங்கள் துபை மைதானத்தில் நேரில் வந்து ஆட்டத்தை கண்டு ரசித்த நிலையில், இந்தியாவில் பல்வேறு நகரங்களில் முக்கியமான பகுதிகளில் மிகப்பெரிய திரைகள் அமைக்கப்பட்டு அதில் இந்த ஆட்டம் நேரலை செய்யப்பட்டது.

இதனிடையே, ஜியோஹாட்ஸ்டாா் தளத்தில் இந்த ஆட்டத்தை மொத்தம் 60.2 கோடி போ் ஒரே நேரத்தில் பாா்த்துள்ளனா். ஆட்டத்தின் முதல் பந்து வீசப்படும்போது 6.8 கோடியாக இருந்த பாா்வையாளா்கள் எண்ணிக்கை, ஆட்டம் செல்லச் செல்ல உயா்ந்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடியும்போது 32.2 கோடியாக இருந்த எண்ணிக்கை, இந்தியாவின் இன்னிங்ஸ் தொடங்கும்போது 36.2 கோடியாக அதிகரித்தது.

இறுதியில் இந்தியாவின் வெற்றித் தருணத்தில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 60.2 கோடியைத் தொட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை 3.5 கோடி போ் ஒரே நேரத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பாா்த்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாா் தளங்கள் ஒன்றிணைந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.