25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் - படம் | AP

Published On :27 பிப்ரவரி 2025, 6:48 pm IST

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அரையிறுதிக்கான போட்டியிலும் ஆப்கானிஸ்தான் நீடிக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு த்ரில் வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)

சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாகவும் தொடர்ச்சியாகவும் வெற்றிகளைப் பதிவு செய்து வளர்ச்சியடைந்து வருவது ஊக்கமளிப்பதாக உள்ளது. இனிமேல் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிகளை அப்செட் எனக் கூற முடியாது. அவர்கள் எப்போதாவது வெற்றி பெற்று அப்செட் செய்யாமல், தொடர்ச்சியாக வெற்றி பெறுவதை பழக்கமாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். இப்ரஹிம் ஸத்ரனின் சதம் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் 5 விக்கெட்டுகள் ஆப்கானிஸ்தான் அணிக்கு மற்றொரு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது. நன்றாக விளையாடினீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் நீடிப்பதற்காக நாளை (பிப்ரவரி 28) நடைபெறும் முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.