நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஐசிசி தரவரிசையில் சாதனை படைத்த பும்ரா..!

இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா ஐசிசி தரவரிசையில் அஸ்வினை முந்தியுள்ளார்.

News image

ஜஸ்பிரீத் பும்ரா - படம்: ஏபி

Updated On :1 ஜனவரி 2025, 4:09 pm IST

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா அதிக புள்ளிகள் (907) பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ரவி அஸ்வின் 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தார். தற்போது, பும்ரா அதை பின்னுக்குதள்ளி சாதனை படைத்துள்ளார்.

மெல்போர்னில் நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியடைந்தாலும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

தற்போதைய டாப் 5 பந்துவீச்சாளர்கள்

1.பும்ரா - 907

2. ஹேசில்வுட் - 843

3. கம்மின்ஸ் - 837

4. ரபாடா - 832

5. ஜான்சென் - 803

இதன்மூலம் உலக அளவில் இதுவரை ஒரு பந்துவீச்சாளர் பெற்ற அதிகபட்ச டெஸ்ட் தரவரிசையில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் டேரக் அண்டர்வுட் உடன் சமன்செய்துள்ளார்.

ஆல்-டைம் பந்துவீச்சில் டாப் 4

  • சிட்னி பார்னெஸ் - 932

  • ஜியார்ஜ் லோஹ்மன் - 931

  • இம்ரான் கான் - 922

  • முத்தையா முரளிதரன் - 920

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.